என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கர்ப்பிணி பெண் கொலை"
- தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிருந்தாவின் தாய் வளர்மதி சித்தோடு போலீசில் புகார் செய்தார்.
- கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் ராயப்பாளையம் ரோடு நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு மங்கையர்கரசி, பிருந்தா(23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் மங்கையர்கரசி திருமணமாகி மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார். 2-வது மகள் பிருந்தா வெட்டுக்காட்டு வலசை சேர்ந்த கார்த்தி என்பவரை காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த தீபாவளி அன்று பிருந்தாவின் பெற்றோர் மொடக்குறிச்சியில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு சென்று விட்டனர். அவரது கணவர் கார்த்தி வேலை விசயமாக திண்டுக்கல் சென்று விட்டார்.
பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பிருந்தாவின் தாய் தினமும் தனது மகளிடம் செல்போனில் பேசி வந்தார். கடைசியாக கடந்த 27-ந் தேதி இரவு 10 மணி அளவில் வளர்மதி தனது மகள் பிருந்தாவிடம் உடல் நலம் குறித்து போனில் விசாரித்தார்.
மறுநாள் 28-ந் தேதி காலை வெகுநேரம் ஆகியும் பிருந்தாவின் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது பிருந்தா இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பிருந்தாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பதறி அடித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு வந்து பிருந்தாவின் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.
மேலும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பிருந்தாவின் தாய் வளர்மதி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் பிருந்தாவின் சாவுக்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ள பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருந்தனர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் பிருந்தா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தொடங்கினர். சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, சப்-இன்ஸ்பெக்டர் பாபு செந்தில் குமார் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது,
கொலை செய்யப்பட்ட பிருந்தா முதலில் கார்த்தியை காதலித்து வந்தார். இந்த நேரத்தில் பிருந்தாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த் (21) என்பவர் அடிக்கடி வந்து உள்ளார். இதனால் அரவிந்துடனும் பிருந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது.
ஒரே நேரத்தில் பிருந்தா கார்த்தி, அரவிந்த் ஆகியோரை காதலித்து வந்து உள்ளார். இதில் கார்த்தி முந்திக்கொண்டு பிருந்தாவை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி தெரிய வந்ததும் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் தான் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிருந்தா வீட்டிற்கு அரவிந்த் வந்து உள்ளார். அவர்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அரவிந்த் பிருந்தாவை நாம் திருமணம் செய்து கொள்ளலாம் வா என்று அழைத்து உள்ளார். அதற்கு பிருந்தா நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனவே உன்னுடன் வர முடியாது என்று மறுத்து உள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த அரவிந்த் என்னுடன் வரவில்லை என்றால் நாம் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதற்கு பிருந்தா என்னால் தற்கொலை செய்து கொள்ள முடியாது நீ வேண்டுமானால் என்னை கொலை செய்து விட்டு நீ தற்கொலை செய்து கொள் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து அரவிந்த் பிருந்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து உள்ள அரவிந்த் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று அரவிந்தை கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்